International
oi-Vishnupriya R
டெல்லி: வியட்நாமில் விபத்துக்குள்ளான படகில் பயணித்த 32 பேர் யார் யார் என்ற விவரங்களை பார்க்கலாம். இந்த தகவலை வியட்நாமுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வியட்நாமில் உள்ள ஃபூ குவோக் தீவு அருகே உள்ள ஹோன் மே ருட் என்ற பகுதிக்கு ஒரு படகில் 32 பயணிகள், 4 மாலுமிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது புறப்பட்ட 400 மீட்டர் தூரத்தில் படகு பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த படகு விபத்தில் 8 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முதலில் படகில் பயணம் செய்தவர்கள் யார் என்ற பட்டியல் கிடைத்துள்ளது.
பெயர் விவரம்:
பாலசுப்பிரமணி பழனிசாமி
செல்வம் பிச்சை
செந்தில்குமார் ஜெயவேல்
சிவகுமார் முத்துகுமாரசாமி
நிர்மல் குமார் சேதுராமன்
முருக பிரபு ஆறுமுகம்
ரூபன் செல்வநாதன் ஜேக்கப் யேசுபாதன்
ஸ்ரீதர் தர்மராஜன்
விக்னேஸ்வர் ராதாகிருஷ்ணன் கோபால்
ராமசுப்பு அன்னவி
அப்தால்கா ஜாஹிருதீன்
ஸ்ரீதர் சுந்தரராஜன்
வம்ஷீதர் செல்லூர் ராம்ராஜ்
செஞ்சடைவேல் குப்புசாமி
நாகலாமடுகு சோஹன்
நல்லபேடா ஆதிசேஷைய்யா ரவிதேஜா
ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத்
ராஜீவ் கலைவாணன்
பாலாஜி நடேசன்
வினய் குமார் சீதாபுரம் பாஸ்கரா
ரவிசங்கர் சுகுமாரன்
விபுல் உத்தம்சந்த்
சந்தோஷ்குமார் சாந்திலால் ஜெயின்
பாபு குப்புசாமி
அழகுராஜ் சிவசாமி
வசந்தகுமார் ஆனந்தன்
ஸ்ரீதர் முடியம்
ஜெயலட்சுமி கெல்லி
கிஷோர் கெல்லி
அவிகாட் செரியன் தாமஸ்
லோவேனி தாமஸ்
ரமேஷ் குமார் பச்சையப்பன்
இந்த 32 பேரில் 15 பேர் பலியாகிவிட்டனர், அவர்களில் தமிழர்கள் 10 பேர், ஆந்திராவை சேர்ந்தவர்கள் 3 பேர், கேரளாவை சேர்ந்தவர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர்.