வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 – புகைப்படங்கள்
Posted on
Spread the love
புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.நிசார் செயற்கைக்கோள் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும்.பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் மிஷன் இயக்குனர் தாமஸ் குரியன்.
Spread the love தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், மனிதர்கள் […]
Spread the love நாட்டில் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக ஒழுத்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட மக்கள் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டில் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10-ல் […]
Spread the love ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, தில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த […]