ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான்.
ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் மோதிக்கொள்வதுதான் அதிகமாக உள்ளது.
“பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது’ என்று அமெரிக்காவும், ‘செய்தி பரிமாற்றம் நடக்கிறது’ என்று ஈரானும் இந்தப் போர் குறித்த பேச்சுவார்த்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

சில நாள்களாக, ஈரான் போர் மிகவும் தீவிரமடையாததால் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், இப்போதும் மீண்டும் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சுகள் தீவிரமடைய கச்சா எண்ணெயின் விலை உயர்கிறது.
போரினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இழப்பீடு வாங்க பிளான் செய்கிறது ஈரான்.
இந்த நேரத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது, “எனக்கு ஈரான் மீது நம்பிக்கையே இல்லை. ஈரானை நம்பக்கூடிய கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன். அவர்கள் தொடர்ந்து என்னிடம் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.