பின், போர் தாக்குதல் செலவுகளை ஈடு செய்ய, ஹார்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்கள் கப்பம் (சுங்க வரி) கட்ட வேண்டும் என்று ஈரான் கூறியது. அந்தப் பணம் ஓமனுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஓமனை கூட்டு சேர்த்தது.
காரணம், ஓமனின் எல்லையிலும் ஹார்முஸ் விரிகிறது.
இதன் பின், ‘நாங்கள் மட்டும் சும்மாவா?’ என்று அமெரிக்கா, “ஹார்முஸ் வழியாக கப்பல்கள் தாராளமாக கடக்கலாம். அதற்கு நாங்கள் உதவுகிறோம்.
ஒருவேளை ஹார்முஸ் வழியாக செல்ல சுங்க வரி வசூலிக்க வேண்டுமென்றால், அது அமெரிக்காவால் மட்டுமே முடியும்” என்று எச்சரித்தது.
இந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் அரங்கேறி கொண்டிருக்க, கடந்த மாதம், அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டது.

இது மூன்று நாள்களுக்குக்கூட நீடிக்கவில்லை. லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அதனால், மீண்டும் ஹார்முஸை மூடிவிட்டது ஈரான்.
இந்த மூடலை மீறி ஹார்முஸை கடக்க முயன்ற கப்பல்களை தாக்குதல் நடத்தி வீழ்த்தியது ஈரான்.
அமெரிக்கா சும்மா இருக்குமா என்ன… அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவிகித பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும்’ என்று அறிவித்தார். இது இடிக்கு மேல் இடியாக இறங்கியது.