‘நீட் தேர்வு நடத்தியே தீர வேண்டும்’ என்று விடாப்பிடியாக இருக்கும் மத்திய அரசு, அதே ஆர்வத்தை அதை சரியாக நடத்தி முடிப்பதிலும் காட்ட வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை.
அதற்கான நியாயத்தைக் கேட்டு ஒருவர் போராடுகையில், அவருக்கான தகுந்த பதிலை தர வேண்டும் என்பது மத்திய அரசின் தார்மீகப் பொறுப்பு.
அதுவும் அவர் உயிரை பணயம் வைத்து போராடும் போது, மத்திய அரசுக்கு பொறுப்பு இன்னும் கூடியிருக்க வேண்டும்.
ஆனால், அப்படி எதுவும் மத்திய அரசிடம் வெளிப்படவில்லை.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கும், சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கும் வாயைத் திறக்க மத்திய அரசுக்கு எப்போது மனது வரும் என்று பார்ப்போம்.