`4 கூடை கருப்பட்டி இருக்கு; வித்துட்டுத்தான் ஊருக்கு போவேன்’ – சென்னையில் போராடும் தருமபுரி மூதாட்டி | story of 75 years old dharmapuri woman who is struggling to selling karupatti in chenni

Spread the love

நான்கு கூடைகள் விற்றுவிட்டால் ஊருக்குப் பயணம்

தற்போது தன்னிடம் நான்கு கூடைகள் கருப்பட்டி இருப்பதாகவும், அவற்றை விற்று முடித்த பின்னரே தருமபுரிக்குத் திரும்ப முடியும் என்றும் கூறினார். கருப்பட்டியை மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

கருப்பட்டியின் பயன்கள்

கருப்பட்டியின் பயன்கள் குறித்தும் மாரியம்மாள் விளக்கினார். காபி, டீ மற்றும் பலகாரங்கள் தயாரிக்க கருப்பட்டி பயன்படுத்தப்படுவதாகவும், நீண்டநாள் சளி தொல்லை மற்றும் தலைவலிக்கு நிவாரணமாக பலர் பயன்படுத்துவதாகவும் கூறினார்.

75 வயதிலும் தளராத தன்னம்பிக்கை

வயது 75-ஐ கடந்த நிலையிலும், வாழ்க்கைப் போராட்டத்தை கைவிடாமல் உழைத்து வரும் மாரியம்மாளின் கதை பலரையும் நெகிழச் செய்கிறது. குடும்ப ஆதரவு இல்லாத நிலையிலும், தனது உழைப்பையே நம்பி வாழும் அவரது மன உறுதி, வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சுபிக்ஷா ஆ

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *