கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம், ஹார்முஸ் நீர்ச்சந்தி, மத்திய கிழக்குப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறியது.
நேற்றுடன் (ஆகஸ்ட் 17) 60 நாள்கள் முடிந்துவிட்டது. இந்த 60 நாள்களில் இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடந்ததோ, இல்லையோ, மோதல் போக்கு நடந்தது. அது இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இன்னும் நிலைப்பாட்டில் இருந்து மாறாத ட்ரம்ப்
நேற்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரானால் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் ஓர் அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது என்பதுதான் எங்கள் முதன்மையான இலக்கு.
எப்போதும் அதுவேதான் எங்களின் ஒரே இலக்காகவும் இருக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் போர் தொடக்கத்திற்கு முன்பும் சரி… பின்னும் சரி… ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் ட்ரம்பும், அமெரிக்காவும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஏதும் இப்போது வரை மாற்றமில்லை.