70 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை தூர்வாரல்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்|Minister Nirmal Kumar Reviews Vaigai Dam Restoration Works

Spread the love

மதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல் குமார்.

ஆய்விற்குப் பிறகு, நிர்மல் குமார் பேசியதாவது…

“வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் அணையின் பல இடங்களில் மணல் குவியல்களும் படிவுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஒரு வாரமாக இது குறித்த பல ஆய்வுக் கூட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.

அந்த ஆய்வுகளின்படி, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 18 முதல் 20 சதவீதம் வரை படிவுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையைச் சரிசெய்து தூர்வாரும் பணிகளைத் தொடங்குவதற்கான ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

அனுமதிகள் மற்றும் அரசாணைகள்:

தூர்வாரும் பணிகளுக்காக ஒன்றிய அரசின் ஒப்புதலைக் கோரியும், சுற்றுச்சூழல் அனுமதி கோரியும் இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் அனைத்துக் கடிதங்களும் அனுப்பப்பட்டுவிட்டன.

ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஓர் அரசாணை நிலுவையில் உள்ளது.

தற்போது புதிய அரசாணை வெளியிடுவதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *