”8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்”- போலீஸ் விசாரணை!- naam talimar katchi women candidate attck with dmk persons

Spread the love

அப்போது போலீஸார் தலையிட்டு புகார் மனு எழுதி கொடுங்கள் என சொல்ல நாங்கள் புகார் மனு எழுதினோம். இதையடுத்து, அங்கிருந்த தி.மு.க-வினர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில், என் மனைவியை கீழே தள்ளிவிட்டு, செங்கல்லால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த எனது மனைவி மயக்கமடைந்து விட்டார். இதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். 48 மணி நேரம் கழித்து தான் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என கூற முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர். எட்டு மாத கர்ப்பிணியான என் மனைவியின் நிலையை பார்க்கும் போது எனக்கு பயமாக உள்ளது. இதற்கு காரணமான தி.மு.க-வினர் மீது புகார் அளித்துள்ளோம்” என்றார். இது குறித்து தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமார், போலீஸார் முறையாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *