தரவுப் பாதுகாப்பு (Data Privacy):
இந்தக் கண்ணாடிகள் மூலம் சேகரிக்கப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் அனைத்தும் AI சேவையகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அந்தத் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன, மூன்றாம் தரப்பினருக்குப் பகிரப்படுகிறதா, எவ்வளவு காலம் பாதுகாக்கப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு நிறுவனங்கள் இன்னும் முழுமையான பதிலளிக்கவில்லை.
எழுந்துள்ள எதிர்ப்புகளும் நடவடிக்கைகளும்:
• அமெரிக்காவில் ACLU, EPIC உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட சிவில் உரிமை அமைப்புகள், Meta நிறுவனத்திடம் முகஅடையாளத் தொழில்நுட்பத்தை Smart Glasses-ல் இணைக்கக் கூடாது எனத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளன.
• இங்கிலாந்து மற்றும் நியூயார்க் நீதிமன்றங்கள், நீதிமன்ற வளாகங்களுக்குள்ளும் விசாரணைக் களங்களிலும் Smart Glasses பயன்படுத்த தடை விதித்துள்ளன.
• உலகின் பல்வேறு கல்வி நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் தங்களுடைய வளாகங்களில் இந்தக் கண்ணாடிகளுக்குத் தடை விதித்துள்ளன.
நிறுவனங்களின் விளக்கம்:
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள Meta நிறுவனம், பதிவு செய்யும் போது கண்ணாடியில் உள்ள LED விளக்கு ஒளிரும் என்பதால் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்; பயனர்களின் பாதுகாப்பிற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; தற்போதைக்கு முகஅடையாள வசதி செயல்படுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
விடை தேடும் உலக நாடுகள்!
AI Smart Glasses பயன்பாட்டிற்கு தற்போது நேரடியான சட்டத் தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும், மிகவேகமான தொழில்நுட்ப வளர்ச்சியையும், குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதே உலக நாடுகள் முன் உள்ள இப்போதைய சவாலாகும். AI அடுத்த கட்டத்திற்கு நகரும் நிலையில், அதற்கேற்ப கடுமையான சட்டங்களும் தனியுரிமைப் பாதுகாப்பு விதிகளும் உடனடியாக உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.