Auqib: ஜம்மு & காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான முதல் வீரர் – யார் இந்த ஆகிப் நபி?| How Auqib Nabi Made It To Team India

Spread the love

அந்த மன உறுதியை அவருக்குள் விதைத்தவர் அவரது தந்தை குலாம் நபி. மகன் இந்திய அணியில் தேர்வான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் காரணம் சொல்லக் கூடாது” என்று கூறியது பலரது கவனத்தை ஈர்த்தது.

ஆகிப் நபியுடன் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடிய நண்பர்களும் அவரது வெற்றியை பெருமையுடன் கொண்டாடுகின்றனர். “ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு முன்னணி வேகப்பந்துவீச்சாளரின் இடத்தை நிரப்பும் அணியில் தேர்வாகியிருப்பது சாதாரண விஷயமல்ல. அது ஆகிப்பின் கடின உழைப்புக்கும், தொடர்ந்து வெளிப்படுத்திய திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம்” என்று அவரது நண்பர் ஆதில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதே அவருக்கு இந்திய அணியின் கதவைத் திறந்தது. கடந்த இரண்டு ரஞ்சி டிராபி சீசன்களில் 104 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

பந்தை ஸ்விங் செய்யும் திறன், துல்லியமான கட்டுப்பாடு, நெருக்கடியான சூழ்நிலைகளில் சிறப்பாக பந்துவீசும் திறன் ஆகியவை தேசிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தன. அதன் பலனாக, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவரை வந்தடைந்தது.

ஜம்மு & காஷ்மீரிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் இருந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் வீரர் என்ற பெருமை ஆகிப் நபிக்கே சொந்தம். பாரமுல்லாவின் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கிய கனவு, இன்று அவரை இந்தியாவின் வெள்ளை ஜெர்சியை அணியும் உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *