திறப்பு விழாவில் மாணவர்களிடம் பேசிய தனுஷ், “காலையில் இருந்து மாலை வரை கைதி மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறோமே என்று ஸ்கூலுக்கு வரும்போதெல்லாம் நினைப்பேன். எப்போது 3.30 மணி ஆகும், ஸ்கூலை விட்டு போகலாம் என்றுதான் தோன்றும்.
மணி அடித்தால் ஒரு தனி சந்தோஷமாக இருக்கும். ஸ்கூல் முடிந்ததும் முதல் ஆளாக நான்தான் வெளியே செல்வேன். அப்படி நான் போகும்போதெல்லாம் தெரியவில்லை, இங்கு இருப்பது தான் சந்தோஷமான நாள்கள் என்று…

உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்கிறேன். ஸ்கூலில் இருக்கக்கூடிய நாள்கள் தான் மிகவும் சந்தோஷமான நாள்கள். எப்போது ஸ்கூல் முடியும் என்று கடந்து சென்று விடாமல் என்ஜாய் செய்யுங்கள். இந்த மாதிரி எனக்கு யாராவது சொல்லி இருந்தால் ஸ்கூலில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் என்ஜாய் செய்திருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.