How a North Indian thief involved in a series of jewel thefts on Omni buses was caught-ஆம்னி பஸ்களில் தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் சிக்கியது எப்படி

Spread the love

இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மக்சூத்கான் மற்றும் அவரது கூட்டாளிகளான ரபீக், முகைதீன் ஆகியோர் மத்தியப்பிரதேசத்தில் இருந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லை வரை உணவுக்காக நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளைக் குறி வைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பேருந்தில் இருந்து பயணிகள் கீழே இறங்கியதும், 3 பேரில் ஒருவர் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டும், மற்ற இருவர் பேருந்திற்குள் ஏறி சீட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் கைப்பைகள், ஜிப் பைகளைத் திறந்து பார்த்து அதில், நகைகள், பணம் இருந்தால் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கயத்தார் காவல் நிலையம்

கயத்தார் காவல் நிலையம்

பெண்களின் கைப்பைகளையே அதிகம் குறி வைக்கிறார்கள். மக்சூத்கான் மற்றும் அவனது கூட்டாளிகள் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 23 சவரன் நகை, வத்தலகுண்டுவில் 8.5 சவரன் நகை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 21.5 சவரன் நகை, உளுந்தூர்பேட்டையில் 80 சவரன் நகை இறுதியாக கயத்தாறில் 40.08 சவரன் நகை என கொள்ளையடிக்கப்பட்ட 173 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கயத்தாரில் திருடிய பிறகே காரில் மத்தியப் பிரதேசம் சென்றுள்ளனர். மக்சூத்கானின் கூட்டாளிகள் இருவரைத் தேடி வருகிறோம்” என்றனர்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *