Police warn Ayyappa devotees not to go into unprotected forest areas-பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் செல்ல வேண்டாம்; ஐயப்ப பக்தர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

Spread the love

தென்காசி மாவட்டம் வழியாக வாகனங்களில் வருபவர்கள் செங்கோட்டை, புளியரை, தென்மலை, புனலூர், பத்மநாதபுரம், கோணி, நிலக்கல் வழியாக பம்பை வந்து அங்கிருந்து மலை ஏறிச் செல்வார்கள். இந்த வழக்கமான வழிகளைத் தவிர்த்து ஆபத்தான காட்டுப்பதைகள் வழியாக பக்தர்கள் சபரிமலைக்கு நடந்து வருகின்றனர். இதில், வனவிலங்குள் நடமாட்டம் உட்பட பல்வேறு ஆபத்துகள் நிறைந்து இருப்பதால் இப்பகுதிகள் வழியாக செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை

ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை

குறிப்பாக, பண்பொழி, மேக்கரை, அச்சன்கோயில், பாறகுளம், கோணி வழியாக பெரும்பாலான பக்தர்கள் நடந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் இந்தப்பாதைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 24 பேர் அடங்கிய ஐயப்ப பக்தர்கள் குழுவினர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள  அச்சன்கோயில் வழியாக சபரிமலைக்கு நடந்து சென்றுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *