நியூயார்க் விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளில், அந்தப் பையில் எந்தவிதமான முறைகேடும் நடந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சஹார் போலீஸார் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் உள்ள ஏர் இந்தியா ஊழியர்கள், சரக்கு கையாளுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் பிற நபர்களை விசாரணைக்காக அழைக்கவுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
மும்பை விமான நிலையத்தில் கடந்த 10 நாட்களில் நிகழ்ந்த நான்காவது திருட்டுச் சம்பவம் இதுவென சஹார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளின் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் சோதனைகள் இருந்தபோதிலும், விமான நிலையத்திலிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் எவ்வாறு வெளியே செல்கிறது என்பது குறித்தும் சிறப்புப் படை ஆய்வு செய்து வருவதாக மூத்த குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். பயணப் பைகளுடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடிய பயணிகள், விமான நிறுவன ஊழியர்கள், சுமை தூக்குவோர் மற்றும் பிற பணியாளர்களின் நடமாட்டத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.