Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

Spread the love

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும்.

அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் காட்டுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

“ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் அனைத்து சம்பாதிக்கும் நபருக்கும் ஆயுள் காப்பீடு வேண்டும்… அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு வேண்டும்.

சாதாரணக் குடும்பத்திற்கே இது அவசியம் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு இது அத்தியாவசியம்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

ஒவ்வொரு சிங்கிள் பேரன்டை தூங்கவிடாத கேள்வி – ‘நமக்கு பின் நம் குழந்தையின் நிலைமை என்ன?’ என்பது தான்.

இந்தக் கவலையைப் போக்க, சிங்கிள் பேரன்ட் தன்னுடைய ஆண்டு வருமானத்தில் 20 மடங்கை ஆயுள் காப்பீடாக கட்டாயம் எடுத்துவிட வேண்டும்.

தனக்கு, தன்னுடைய குழந்தைக்கு என ஃபேமிலி ஃப்ளோட்டர் காப்பீடு எடுத்துவிட வேண்டும்.

காப்பீடு எடுப்பது, சேமித்து வைப்பது, முதலீடு செய்வது போன்றவற்றை விட, மிக முக்கியமானது, அது அவர்களுக்குப் பின் குழந்தைக்கு சென்று சேர்வது.

காப்பீடு, சேமிப்பு, முதலீடு செய்யும் போது, குழந்தையை நாமினியாக போட்டு, உங்களது நம்பிக்கைக்குரிய நபரை Guardian ஆக நியமியுங்கள்.

அசையா சொத்துகளுக்கு உயில் எழுதி வையுங்கள். வீட்டில் ஏ4 ஷீட்டில் சொத்துகள் உரிமைக் குறித்து எழுதி வைத்தாலே, அது உயில் தான். அதை பதிவு செய்ய வேண்டும் என்பது கூட இல்லை.

ஆனால், அது எங்கிருக்கிறது என்பது குறிப்பிட்டவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

உயில் எழுதும் போது, Guardian-க்கு சொத்தை விற்கும் உரிமை இல்லை என்பதை குறிப்பிட்டுவிடுங்கள். இது உங்களின் குழந்தையின் நிதி பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யும்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *