Tejashwi Yadav accuses nda leaders of being liars – ’தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பொய்யர்கள்’ – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Spread the love

2011 அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரை செய்யக் கூடாது. 2021 – 25 இடையே மக்கள் தொகை கூடி இருக்கின்றது. பொதுப்பிரிவு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்ற முடியாது என மத்திய அரசுக்கு தெரியும்.  அதற்கான பெரும்பான்மை அவர்களிடம் இல்லை. ஆனால் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், நாங்கள் எதிராக இருப்பதை போலவும் காட்ட இதை செய்து இருக்கின்றனர். ஆனால் இது உண்மையல்ல.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இதுவரை தலைவராக எத்தனை பெண்கள் இருந்திருக்கின்றனர்? அவர்கள் செய்வது வெறும் அரசியல் மட்டும்தான், அவர்களுக்கு அரசியலைமைப்பு தேவையில்லை.ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை திணிக்க பார்க்கின்றனர், இதை நாங்கள் கட்டாயம் எதிர்ப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் பேச்சை கேட்க வேண்டியதில்லை, அவர்கள் பொய்யர்கள். நாட்டிற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி மணியடித்து, பூசை செய்வார், அவ்வளவுதான்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *