பந்துவீச்சாளரின் துல்லியம், திட்டமிடல் மற்றும் மன உறுதி ஆகிய மூன்றும் ஒன்றாக வெளிப்படும் தருணமாகவே கிரிக்கெட் உலகம் இதைப் பார்க்கிறது.
ஒரே போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளிலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சாதனையாக கருதப்படுகிறது.
அதையே செய்து காட்டியுள்ள தீபன் லிங்கேஷ், ஒரு போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நடப்பு TNPL தொடரிலேயே, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கோவை அணியின் முக்கிய ஆயுதங்களில் ஒருவராக தீபன் லிங்கேஷ் உருவெடுத்திருந்தார்.

புதிய பந்திலும், நடு ஓவர்களிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த அவர், திருச்சிக்கு எதிரான போட்டியில் அதை வரலாற்று சாதனையாக மாற்றினார். TNPL வரலாற்றிலும் இது ஒரு முக்கிய மைல்கல்.
TNPL போட்டியில் தனது முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தீபன் லிங்கேஷ் படைத்துள்ளார்.
TNPL என்பது பல இளம் வீரர்களின் கிரிக்கெட் கனவுகளுக்கான முக்கிய மேடையாக இருந்து வருகிறது. அந்த மேடையில் வெறும் மூன்று பந்துகளில் உலக சாதனையைத் தொட்ட தீபன் லிங்கேஷ், இனி ஒரு போட்டியின் நாயகனாக மட்டும் அல்ல; தமிழ்நாட்டு கிரிக்கெட்டின் எதிர்கால ஸ்பின் நம்பிக்கையாகவும் கவனிக்கப்பட வேண்டிய வீரராகவும் உருவெடுத்துள்ளார்.