திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இடையே தான் கடுமையான போட்டி நிலவுவதாக நம்பப்பட்டது.
இந்த இரண்டு வேட்பாளர்களுக்கு மத்தியில் தான் நீயா நானா என்கிற போட்டி என்று யூகித்து வந்த நிலையில், சத்தமே இல்லாமல் மூன்றாவதாக நின்ற த.வெ.க வேட்பாளர் கமலி, இருவரையும் பின்னுக்குத் தள்ளி அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வாகை சூடி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கமலி.
யார் இந்த கமலி?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கமலி. 28 வயதான இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இலத்தரசியாக குடும்பத்தை கவனத்து வந்திருக்கிறார் கமலி.
முதுகலை பட்டதாரியான இவருக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம் காரணமாக த.வெ.க- வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அவிநாசி தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகனை தோற்கடித்ததுடன், மருத்துவர் கோகிலாமணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளி கவனத்தை ஈர்த்து வருகிறார் கமலி.