அகன்ற நெற்றியா… நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி! சாமுத்ரிகா லட்சணம்|A broad forehead? You are the lucky one! Samudrika Lakshana.

Spread the love

புருவங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருந்தால், அத்தகைய அன்பர்கள் பொறியியல் துறை மற்றும் கலைத் துறையில் வல்லுநராகத் திகழ்வார்கள்.

பெண்களுக்கு புருவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் இருப்பது சுபலட்சணம். அவர்களின் வாழ்வில் நிறைந்த சௌபாக்கியம் நிலவும். புருவ இடைவெளி அதிகம் இருப்பின், அரசபோக வாழ்க்கை கிடைக்கும் என்கின்றன அங்கலட்சண சாஸ்திர நூல்கள்.

புருவங்களைப் போன்றே கண்களின் அமைப்புகளைக் கொண் டும் சில விளக்கங்களைச் சொல்கின்றன அங்கலட்சண சாஸ்திர நூல்கள்.

கண்கள் உட்புறமாக ஆழ்ந்திருப்பின் தாராள மனம் படைத்தவர் களாகவும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வாக்கு சாதுர்யத்தால் சாதிப்பார்கள்.

ஆழ்ந்த கண்களைக் கொண்ட பெண்கள் எனில், லட்சுமி கடாட்சம் மிக்கவர்களாகத் திகழ்வர். இவர்கள், சுகபோக வாழ்க்கையில் திளைப்பார்கள்.

அளவுக்கு அதிகமாக அகன்றும், சற்று கோணலாகவும் அமைந்த கண்களைக் கொண்டவர்கள், சந்நியாசியைப் போன்று எதிலும் பற்றற்று வாழ்வார்கள். பதவியில் பற்று ஏற்படாது. குடும்ப வாழ்விலும் ஆழமான பிடிப்பு ஏற்படுவது கடினம். மருத்துவம், ஜோதிடம், மந்திர-தந்திரங்களில் அதீத நம்பிக்கையும், சிலருக்கு இவற்றில் பயிற்சியும் இருக்கும்.

பூனைக் கண்ணைப் பெற்றிருப்பவர் எனில், அது அதிர்ஷ்ட அமைப்பு. எதிர்பாராத மாற்றங்களால் வாழ்க்கை உயருமாம்!

கண்களின் அமைப்பு மட்டுமின்றி, கண்களுக்கு அருகில் மச்சங்கள் அமைந்திருக்கும் பாங்கைக்கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஒருவருக்கு வலது கண் புருவத்தில் மச்சம் அமைவது, மிக அற்புதமான அமைப்பாகும். இப்படியான நபர்களுக்கு, அவருடைய 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் ஏற்படும்.

பெரும்பாலும் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். இடது கண் அருகில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகத் திகழ்வார்கள்; மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *