பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது ஒரு குழப்பமான நிலைப்பாடு, ஆனால், இதில் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.