3 தமிழர்கள் சுட்டுக்கொலை.. விஜய்க்கு கர்நாடகா துணை முதல்வர் கொடுத்த பதில்!|3 Tamils Killed: Karnataka CM’s Sharp Reply to Vijay

Spread the love

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கர்நாடகா வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்று கர்நாடகா அரசு குற்றம் சாட்டுகிறது.

ஆனாலும், தமிழ்நாடு இந்தச் சம்பவத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், “இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில், இந்தச் சம்பவம் குறித்த கேள்விக்கு கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனக்கெனச் சிக்கல்கள் இருக்கின்றன. அதேபோல, எங்கள் மாநிலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்பதை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *