“அடுத்து இது உங்கள் தட்டையும் பாதிக்கும்”- கேஸ் விலை உயர்வு குறித்து ராகுல்|opposition leader rahul gandhi condemns commercial cylinder price hike

Spread the love

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், “தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயர்வு வரும் என்று நான் சொல்லியிருந்தேன். இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிந்த உடன் வணிக சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில். அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் உயரும்.

காங்கிரஸ் ராகுல் காந்தி

காங்கிரஸ் ராகுல் காந்தி

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ.993 உயர்த்தியது வணிகர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சிலிண்டர் விலை ரூ.1,380 அதிகரித்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% அதிகரித்திருக்கிறது.

தேநீர்க் கடை, தாபா, ஹோட்டல், பேக்கரி, இனிப்புக் கடை என அனைவரின் சமையலறைச் சுமையும் அதிகரித்துள்ளது. அடுத்து இது உங்கள் தட்டையும் (உணவையும்) பாதிக்கும்” என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *