இதற்கிடையில், ஆ.ராசாவின் பதிவுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தப் பதிவு டெலிட் செய்யப்பட்டது.
இன்று காலை அமைச்சராக வன்னி அரசு பதவியேற்றதும் மீண்டும் ஆ.ராசா தன் எக்ஸ் பக்கத்தில்,
“என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவுக்கு விசிக-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில்,
“விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை! தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இரத்தமும் சதையுமாய் சிந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்து, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தோள் கொடுத்தது சிறுத்தைகளின் உழைப்பு! “கட்சித் தாவல்” பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, பிறகு அதே பாஜகவை எதிர்த்த ‘சுயநல சாணக்கியத்தனம்’ யாருடையது?