அதிமுக – திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது எனத் திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரைக்கும் ஒன்றிய அரசினை எதிர்த்து தவெக அரசில் இருக்கும் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்தக் கேள்வியும் எழுப்பியதாக எனக்கு நினைவில் இல்லை.

கனிமவள மசோதாவாக இருக்கட்டும், நிதித்தொகையாக இருக்கட்டும். மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடிய ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
எந்தவொரு விவாதமும் இல்லாமல் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அதைப்பற்றி கூட இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.