நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – அதிமுக கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கே. பழனிசாமி முதலில் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிவந்த நிலையில், பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் திமுக அதிமுக கூட்டணி பேசப்பட்டதா? முதல்வர் வேட்பாளராக திருமாவை நிறுத்த முடிவு செய்தார்களா? என்பது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த திருமாவளவன், ” என்னை முதல்வராக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தபின், செய்தியாளர் சந்திப்புக்கு புறப்பட்டபோது கூட, ஒரு தரப்பை சேர்ந்த நபர் தம்மை தொடர்பு கொண்டு, ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்றும், தம்மை முதல்வராக அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.
ஆனால், அவரிடம் வேண்டாம் என நான் கூறி விட்டேன்” என்று தெரிவித்திருந்தார். தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவிடம் இதுதொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.