கோலிவுட், டோலிவுட் என இப்போது டிரெண்டிங்காக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவர் சமீபத்தில் அவருடைய எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றிருந்தார்.

திரையில் நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்பதையும் நான் சமமாகவே நேசிக்கிறேன். திரையில் நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்பதையும் நான் சமமாகவே நேசிக்கிறேன். பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும், கடினமான மருத்துவப் படிப்பை அவர் வெற்றிகரமாக முடித்தது பற்றி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீ லீலா.
அந்தப் பேட்டியில் அவர், “ஒரே நேரத்தில் சினிமா மற்றும் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கு மன உறுதியும், பொறுமையும் மிகவும் அவசியம். சில நேரங்களில் ஒரு விஷயத்திலிருந்து மற்றொன்றுக்கு மனதை மாற்றிக்கொள்வது சவாலான காரியம்.
நீண்ட நேரப் படப்பிடிப்பிற்குப் பிறகு இரவில் எம்பிபிஎஸ் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும். சில நாட்களில் ‘எனக்கு என்னதான் நடக்கிறது?’ என்று பைத்தியம் பிடிப்பது போலத் தோன்றும்.
ஆனால், அந்த இரண்டு பயணங்களையுமே நான் மிகவும் ரசித்தேன். எனக்கு மருத்துவத்துறை மிகவும் பிடிக்கும்.
அந்தப் பாடங்களின் மீதுள்ள ஈடுபாட்டால்தான் எனது பெரும்பாலான நேரத்தை அதைப் படிப்பதிலேயே செலவிட்டேன்.
இதற்காகத் திட்டமிடுதல் மற்றும் அமைதியாகச் செயல்படுவது மிக முக்கியம். எந்தவொரு உயரத்தை எட்டவும் குறுக்கு வழிகள் கிடையாது.
விடாமுயற்சியும், ஒழுக்கமுமே ஒருவரை இரண்டு வெவ்வேறு துறைகளில் சாதிக்க வைக்கும். திரையில் நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்பதையும் நான் சமமாகவே நேசிக்கிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.