International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவும் ஈரானும் இடையே ஜெனீவாவில் நடைபெற்ற 12 மணி நேர பேச்சுவார்த்தையில், அடுத்த 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ரோட்மேப் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து முழுமையாக விலக மறுத்ததால், இந்த 60 நாள் பாதை இன்னும் தொடங்கப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவும், வளைகுடாவில் நிரந்தரமாக உருவாக வேண்டும் என்றால் 2 விஷயங்கள் நடக்க வேண்டும்.

அப்பாஸ் அராக்ச்சி
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே அமெரிக்கா முக்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்.
அதன்படி, ஈரானின் மறுசீரமைப்புக்காக 300 பில்லியன் டாலர் அளவிலான திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது. மேலும், ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. கடற்படை முற்றுகையையும் நீக்கியுள்ளது. மேலும், ஈரானின் சில முடக்கப்பட்ட சொத்துக்களையும் விடுவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், டிரம்பின் கொலை மிரட்டல் காரணமாக ஈரான் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததற்கு முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டதாக அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் விலக வேண்டும்
இந்த 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றும் ரோடுமேப் உருவாக, இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து முழுமையாக விலகி, அங்குள்ள அனைத்து போர் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட பின்னரே தொடங்கப்படும் என்று ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதற்காக புதிதாக அமைக்கப்பட்ட ‘லெபனான் டி-கான்ஃப்ளிக்ட் செல்’ (Lebanon Deconfliction Cell – LDC) இந்த 60 நாள் ஒப்பந்த பேச்சுவார்த்தையின் முதல் உண்மையான சோதனை என்று அராக்ச்சி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் Lebanon Deconfliction Cell தான் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்திரயத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
இஸ்ரேல் விலக மறுப்பு
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில், “லெபனானில் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதியில் இருந்து இஸ்ரேல் விலகாது” என்று அறிவித்துள்ளார். மேலும், அமைச்சர் பென்-க்விர், “ஒரு அங்குலம் கூட விலக மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
இது, அமெரிக்கா – ஈரான் மத்தியில் உருவாகியிருக்கும் இடைக்கால ஒப்பந்தத்தின் முதல் விதியை நேரடியாக மீறுவதாகவும், 60 நாள் பாதையை தொடங்குவதற்கு முன்னரே தடை ஏற்படுத்துவதாகவும் ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது, அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்ட முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளது. இஸ்ரேல் தனது நிலையை மாற்றாவிட்டால், 60 நாள் ஒப்பந்த பாதை தொடங்கப்படாது என்று ஈரான் தெளிவாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் எப்படி முன்னேறுகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
2 விஷயங்கள்
ஏற்கனவே கூறப்பட்டது போல் வளைகுடாவில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் முதல் விஷயம் இஸ்ரேல் லெபனான் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறி, நிரந்தரமாக தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இரண்டாவது விஷயம் 60 நாட்கள் பேச்சுவார்த்தை முடிந்து இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டும் வரை டிரம்ப் சமுக வலைத்தளத்தில் ஈரான் குறித்தும், ஈரான் தலைவர்கள் குறித்தும் எவ்விதமான பதிவும் போடக்கூடாது.
இது இரண்டும் நடந்தால் மட்டுமே அமெரிக்கா – ஈரான் போரில் நிறந்தர தீர்வு எட்டப்பட்டு அமைதி திரும்பும்.

