கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.
இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.
இவருக்கான இரங்கல் கடிதத்தில் தற்போதைய ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி குறிப்பிட்டுள்ளதாவது…
“ஈரான் மற்றும் அமெரிக்க அதிபர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை “மாபெரும் சாத்தான்’ (அமெரிக்கா) மீண்டும் மீண்டும் மீறியிருப்பது ஒரு அடிப்படை உண்மையை மறுபடியும் அம்பலப்படுத்தியுள்ளது.

அதாவது, அமெரிக்க அதிபரின் கையெழுத்து முற்றிலும் மதிப்பற்றது, அதற்கு எந்தவொரு நம்பகத்தன்மையும் இல்லை.
அச்சுறுத்தல், சர்வாதிகாரம் மற்றும் கொடூரம் ஆகியவை அமெரிக்காவின் கொள்கை மற்றும் கோட்பாட்டின் பிரிக்க முடியாத அங்கங்களாகும்.
இன்று, மாபெரும் சாத்தான் தனது உண்மையான, முகமூடி இல்லாத முகத்தை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. இதன் மூலம், குற்றச்செயல்கள் மற்றும் வாக்குறுதி மீறல்களின் இந்த இருண்ட அத்தியாயம், அமெரிக்காவின் நேர்மையின்மை, பகுத்தறிவற்ற தன்மை, நம்பகத்தன்மையற்ற போக்கு மற்றும் தீங்கிழைக்கும் குணத்திற்கு மற்றொரு மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.