Sports
oi-Yogeshwaran Moorthi
மியாமி: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே 2 கோல்களை அடித்ததன் மூலமாக கோல்டன் பூட் ரேஸில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால் மெஸ்ஸி இந்த விருதை வெல்ல ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 3வது இடத்திற்கான ஆட்டம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்றது. இதில் இரு அணிகளுமே அட்டாக்கிற்கு மேல் அட்டாக்கை செய்தனர். இதனால் கோல் மழை பொழிந்தது என்றே சொல்லலாம். முதல் பாதியிலேயே இங்கிலாந்து அணி 4 கோல்களை விளாசியது.

இதன்பின் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே 48வது நிமிடத்தில் அந்த அணிக்காக முதல் கோலை அசத்தினார். இதன்பின் மீண்டும் 66வது நிமிடத்தில் எம்பாப்பே அடுத்த கோலை அடித்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்தது. இந்த போட்டியில் 2 கோல்களை விளாசியதன் மூலமாக எம்பாப்பே புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது உலகக்கோப்பை தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே 22 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் மெஸ்ஸி 21 கோல்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் ஃபிஃபா உலகக்கோப்பை தொடருக்கான கோல்டன் பூட் ரேஸிலும் எம்பாப்பே முன்னிலை பெற்றுள்ளார். மொத்தமாக 10 கோல்கள், 3 அசிஸ்ட்களுடன் எம்பாப்பே முதலிடத்தில் இருக்கிறார்.
1970ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ஒரு உலகக்கோப்பை தொடரில் இரட்டை இலக்கத்தில் கோல் அடித்த முதல் வீரராக எம்பாப்பே உருவாகினார். இதனால் மெஸ்ஸிக்கு இறுதிப் போட்டியில் புதிய சவால் எழுந்துள்ளது. ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்ஸி 3 கோல்கள் அடித்தால் மட்டுமே கோல்டன் பூட் விருதை எளிதாக கைப்பற்ற முடியும்.
குறைந்தபட்சம் 2 கோல்களாவது அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மெஸ்ஸி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்து, இறுதிப் போட்டியில் கோல்டன் பூட்டை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருந்தாலும் ஸ்பெயின் அணியின் டிஃபென்ஸ் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இத்தனை கோல்களை போடுவது எளிதான விஷயமாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது.