அமெரிக்க வேலையை விட்டுத் திரும்பிய தமிழர்… இந்திய MRI-யால் உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி? | Voxelgrids Takes On India’s MRI Problem

Spread the love

பெங்களூரைச் சேர்ந்த “Voxelgrids’ என்ற மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹீலியம் இல்லாத 1.5 டெஸ்லா MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய தமிழரான டாக்டர் அர்ஜுன் அருணாசலம் தலைமையில் உருவான இந்தத் தொழில்நுட்பம், இறக்குமதி செய்யப்படும் MRI கருவிகளுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்:

உலகளாவிய MRI கருவிகள் சந்தையில் GE HealthCare, Siemens Healthineers, Philips உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால், ஒரு 1.5 டெஸ்லா MRI கருவியின் விலை ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை உள்ளது.

மருத்துவ உபகரணங்களுக்காக இந்தியா தனது தேவையில் பெரும்பகுதியை இறக்குமதியையே சார்ந்துள்ளது. இதன் காரணமாக, மேம்பட்ட MRI வசதிகள் பெருநகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே பெருமளவில் கிடைக்கின்றன.

Voxelgrids தொடக்கம்:

GE நிறுவனத்தில் MRI ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய டாக்டர் அர்ஜுன் அருணாசலம், 2008-ஆம் ஆண்டு அந்தப் பணியை விட்டு இந்தியா திரும்பினார். பின்னர், 2017-ல் Voxelgrids நிறுவனத்தைத் தொடங்கி, குறைந்த செலவில் MRI தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *