ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம்.சுகுமார்.
அவரின் மனுவில், “ஆற்காடு அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துதர வேண்டும்.

அதேபோல கலவை அரசு மருத்துவமனையிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல், கண் அறுவை சிகிச்சை மையத்துக்குப் புதிய கட்டட வசதி, புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம், ஆற்காடு நீதிமன்றத்துக்குச் சுற்றுச்சுவர் ஆகியவையும் அவசியமாகத் தேவைப்படுகின்றன.