‘அமைச்சர் ஆனந்தின் அறையில் தொங்கும் சிவப்பு துணி!’ – பின்னணி என்ன? |Red Cloth Hanging in Minister Anbil Mahesh’s Room!” – What’s the Story Behind It?

Spread the love

இதழ் வெளியான நிலையில் அமைச்சரின் அறையில் தொங்கும் அந்த சிவப்புத் துணி புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் பரவி வருகிறது.

அமைச்சரின் அறையில் திடீரென தொங்கும் அந்த சிவப்புத்துணியை பற்றி அமைச்சருக்கு நெருக்கமான கோட்டை வட்டாரத்தினர் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “அமைச்சர் ஆனந்துக்கு கடவுள் பக்தி அதிகம். எந்தவொரு முக்கியமான காரியத்தை செய்வதற்கு முன்பும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு போய் வணங்கிவிட்டுதான் வேலையை தொடங்குவார்.

சிவப்புத் துணி

சிவப்புத் துணி

அந்த கோயில்தான் அவருக்கு மனதுக்கு நெருக்கமான இடம். தவெகவின் வேட்பாளர் பட்டியலையும்கூட அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்துவிட்டுதான் தலைவரிடமே கொடுத்தார். சமீபமாக அமைச்சரின் நீர்வளத்துறை சார்ந்த பிரச்னைகள் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவிரி, மேகதாது என உள்ளூர் எதிர்க்கட்சி தொடங்கி பக்கத்து மாநில ஆளுங்கட்சி வரை விமர்சிக்கிறார்கள். அவையிலும் அமைச்சரின் துறையை எதிர்க்கட்சியினர் அடித்து வெளுக்கின்றனர். இந்த சிக்கல்களெல்லாம் தீர வேண்டும் என்பதற்காக அவரின் இஷ்ட கோயிலில் வேண்டி சிறப்பு பூஜை செய்து சிவப்புத் துணியை வாங்கி வந்து மாட்டியிருப்பார்” என கிசுகிசுக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *