சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஷ், அம்மா உணவகங்களால் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

நேரமில்லா நேரத்தின் இறுதியில் பேசிய துணை மேயர் மகேஷ் குமார், `அம்மா உணவகங்களின் மீது இந்த அரசுதான் கவனம் செலுத்துவதைப் போலவும், இவர்களின் வருகைக்குப் பிறகுதான் வருவாய் உயர்ந்திருப்பதைப் போலவும் தோற்றத்தை உண்டாக்குகின்றனர்.