பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளையும் கையாண்ட விதம் உட்பட, இந்த அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து உடனடியாக ஒரு சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பக்தர்கள் தங்களின் காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த விசாரணையின் முடிவுகளும், அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தாங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும் விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்களது அரசாங்கத்தின் மற்றும் இந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கியுள்ளது. இந்திய மக்கள் இதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்”.