அழைப்பு விடுத்த ஸ்டாலின்… திமுகவில் இணையும் விசிக பனையூர் பாபு?

Spread the love

‘ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டாரா திருமாவளவன்?’ என விஜய் அமைச்சரவைக்கு வி.சி.க சென்றதை விமர்சித்து, அக்கட்சியிலிருந்து விலகிய ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு விரைவில் தி.மு.க-வில் இணைய இருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

விஜய் - திருமாவளவன்
விஜய் – திருமாவளவன்

நம்மிடம் பேசியவர்கள், “கடந்த ஆறு மாதங்களாக செய்யூர் தொகுதியை தயார் செய்து வைத்திருந்தார் பனையூர் பாபு. எந்த ஆலோசனையுமின்றி செய்யூர் தொகுதியை சிந்தனைச் செல்வனுக்கு கொடுத்துவிட்டார். இதனால் கடும் அப்செட்டான பாபு, வி.சி.க-விலிருந்து ஒதுங்கியிருந்தார்.

சீட் கிடைக்காத விரக்தி, கட்சியில் முக்கியத்துவம் இல்லை உள்ளிட்ட காரணங்களுடன் அவர் விலகலாம் என கிசுகிசுக்கப்பட்டன. இந்த சூழலில், விஜய் அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றதையும் பனையூர் பாபு துளியும் விரும்பாத நிலையில் மே 24-ம் தேதி மாலை விலகினார். அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கும் நிலையில் அதையேற்று அவர் விரைவிலேயே தி.மு.க-வில் இணையலாம்” என்றனர்.

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், “வி.சி.க, த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்றதை எங்கள் கட்சித் தலைமைக்கு விரும்பவில்லை. எனவே வி.சி.க-வில் அப்செட்டாக இருப்போரை கட்சிக்குள் இழுக்க முடிவெடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

விசிக பனையூர் பாபு

அதனடிப்படையில், பனையூர் பாபுவை அழைத்து பேசியது தி.மு.க தலைமை. அப்போது பிடி கொடுக்காத பாபு, தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். வரும் ஜூன் 7-ம் தேதி அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் ஆயிரக் கணக்கான வி.சி.க-வினருடன் பனையூர் பாபு இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இணைந்தால் மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *