பீரங்கிப் படைகள்
பதினெட்டாம் நூற்றாண்டில், பாளையங்கோட்டையை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாளையங்கோட்டை ஆங்கிலேயர் கைவசம் சென்றது.
அப்போது பாளையங்கோட்டையின் நீளம் 2700 அடியும், சுற்றுச்சுவர் 15 அடியும் ஆகும்.
தற்போதுள்ள பாளையங்கோட்டையின் சுவடு முருகன்குறிச்சி, வாய்க்கால்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாளையங்கோட்டையின் முந்திய கோட்டை மட்டுமே.
பின்னர் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் பாளையங்கோட்டை மிகப்பெரும் கல்வி நிலையமாக மாற்றப்பட்டு, இன்று தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது.

கோட்டைக்குள் காவல் சாவடிகள்:
1856-ல் கோட்டைக்குள் காவல் சாவடிகள் நிறுவப்பட்டு அவ்விடங்களில் எண்ணுடன்கூடிய கற்களும் நடப்பட்டிருந்தன. இவ்வகையான கண்டோன்மென்ட் என்ற ஆங்கில எழுத்துடனும், எண்ணுடனும் கூடிய கற்களை இன்றும் 10 இடங்களிலாவது காண முடிகிறது.
இவ்வாறு உயர்ந்து வளர்ந்திருந்த பாளையங்கோட்டையின் சுவடாய் எழுந்து நிற்பது மேடை காவல் நிலையம் மட்டுமே. சமீபத்தில் இந்த மேடை காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் இதன் சிறப்பு மக்களின் பார்வைக்குத் தெரியாமல் உள்ளது.