யார் இந்த இளவேனில் வாலறிவன்?
தமிழ்நாட்டின் கடலூரில் பிறந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் வசிப்பவர். சிறு வயதில் தடகளம், பேட்மின்டன் என பல விளையாட்டுகளில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், அவருடைய வாழ்க்கையின் திசையை மாற்றியது 13 வயதில் கையில் கிடைத்த ஒரு ஏர் ரைஃபிள்.
துப்பாக்கிச் சுடுதலை முதலில் அறிமுகமாகிப் பார்த்தவர், பின்னர் அதிலேயே தீவிரமாகப் பயிற்சி பெறத் தொடங்கினார். ஜூனியர் பிரிவிலேயே சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தியவர், 2018-ல் ISSF Junior World Cup-ல் தங்கம் வென்றார்.

அடுத்த ஆண்டே, 2019 ISSF World Cup-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து டோக்கியோ 2020 மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இப்போது, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற அணியின் முக்கிய வீராங்கனையாக மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார் இளவேனில்.
13 வயதில் தொடங்கிய அந்தப் பயணம்… இன்று ஆசிய விளையாட்டின் பதக்க மேடையில் நிற்க வைத்திருக்கிறது!