கேரளாவில் இருந்து வரும் தண்ணீர் தான் அது. வேறு வழியில்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்துள்ளது.
அதிகமான வெள்ள நீர் ஊருக்குள் வந்து பாதிப்படையக்கூடாது என்று தான் அவர்கள் அந்தத் தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் அவர்கள் மேகதாது அணையை கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் அளவில் தான் இந்த அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அணை கட்டினால் வன விலங்குகள் மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும். பல்வேறு வழக்குகள் முன்வைத்து இந்த அணை கட்டுவதற்கு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை” என்று தெரிவித்திருக்கிறார்.