இந்தியாவில் எங்கேயும், எப்போதும் கேட்கப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று – ஆதார் கார்டு.
அந்த ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.
ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறியிருப்போம். அப்போது முகவரி மாறியிருக்கும். அதை உடனடியாக ஆதாரில் அப்டேட் செய்து விட வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு மேல், ஆதார் கார்டில் தகவல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும், அதை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். காரணம், 10 ஆண்டுகளில் நமது முக அமைப்புகள் மாறியிருக்கும்.

எல்லா இடங்களிலும் கேட்கப்படும் ஆவணம் இது என்பதால், அது அப்டேட்டாக இருந்தால், பல குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.
இந்த அப்டேட்டுகளையும், ஏதேனும் ஒரு மாற்றத்தையும் ஆதார் கார்டில் செய்ய வேண்டுமென்றால், இ சேவை மையங்கள், தபால் அலுவலகங்களில் செய்தால், கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
ஆனால், இவற்றில் சில மாற்றங்கள் ஆன்லைனில் முற்றிலும் இலவசம்.