அதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைப்படி,
ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பணம் பரிவர்த்தனை செய்யும்போது, அந்தப் பணம் பெறுநரின் வங்கிக்கணக்கில் சென்று சேர 1 மணி நேரம் ஆகும்.
அந்த 1 மணிநேரத்திற்குள், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால், பணம் பரிவர்த்தனை ஆகாமல் தடுத்துவிடும். இது ரூ.10,000-க்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கே பொருந்தும்.
மோசடிகளில் பெறப்படும் பணம் பெரும்பாலும் தனிநபரின் வங்கிக் கணக்கில் தான் பெறப்படும். அதற்கு தான், இந்தச் செக்.
இது நெட் பேங்கிங், RTGS, IMPS, NEFT, வாலட் பேங்கிங் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

ஒருவேளை, நாம் ஒருவருக்கு பணம் அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். வங்கி அந்தப் பண பரிவர்த்தனையைச் சந்தேகப்பட்டால், நம்மிடம் மீண்டும் ‘Confirmation’-ஐ கேட்கும்.
நாம், ‘ஓகே’ கொடுத்தப் பின் தான், பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் செல்லும்.
ஒவ்வொரு முறை, ஒருவருக்கு பணம் அனுப்பும் போதும், 1 மணிநேரம் கழித்து தான் பணம் செல்லும் என்றால், அது மிகவும் சிரமம். அதனால், வழக்கமாக பணம் அனுப்புகிற நபரை நாம் ‘Whitelist’ செய்துகொள்ளலாம். அதனால், அந்த நபருக்குப் பணம் சென்று சேர்வதில் தாமதம் இருக்காது.