தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனால் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதனிடையே நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள புதுமனை செட்டிகுளத்தைச் சேர்ந்த த.வெ.க தொண்டரணி அமைப்பாளர் இசக்கியப்பன், விஜய் ஆட்சி அமைக்க முடியாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த இசக்கியப்பன், கடந்த 9-ம் தேதி காலை மகாராஜபுரம் சந்திப்பில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.