ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தானுக்கு தான் பலத்த அடி.. உண்மையை ஒப்புக்கொண்ட இம்ரான் கான் சகோதரி | Operation Sindoor: A massive blow to Pakistan, Imran Khan’s sister admits the truth

Spread the love

International

oi-Mani Singh S

இஸ்லாமாபாத்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி பெற்றது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி கூறியுள்ளார். மேலும், தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இன்றி பாகிஸ்தான் உண்மையை மறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டதால் தான் பாகிஸ்தானிற்கு பாதிப்பு குறைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

A massive blow to Pakistan Imran Khan s sister admits the truth

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் அப்பவி சுற்றுலாப் பயணிகள்மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தது.

இம்ரான் கானின் சகோதரி ஒப்புக்கொண்டார்

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது. இந்தியா தனது வான் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் அத்துமீறலை தவிடு பொடியாக்கியது. அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியாவும் தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் நடந்த இந்த மோதலையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூரில் பலத்த அடி வாங்கினாலும் அதெயெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாத பாகிஸ்தான், இந்தியாவுக்கே பலத்த சேதம் என தம்பட்டம் அடித்தது. இந்தியாவின் ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூட அளந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானின் இந்த கூற்றை இந்திய நிராகரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூரில் பலத்த சேதம் ஏற்பட்டதை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் உண்மையை மறைக்கிறது

நிசாய் கூறுகையில், “இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இன்றி பாகிஸ்தான் உண்மையை மறைக்கிறது” என்றார். இம்ரான் கான் சகோதரியின் இந்த பேட்டி, பாகிஸ்தானில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடண்டியாக பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் விசாரணை முகமை, நியாசிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

அவருக்கு அனுப்பிய சம்மனில், அரசின் அமைப்புகள் குறித்து அவதூறு பரப்புவதற்காக பொய்யான தகவல்களை பரப்புவது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் சகோதரி நியாசி, டிரம்ப் தலையீடு குறித்தும் பதிவிட்டு இருந்தார். தனிப்பட்ட முறையில் டிரம்ப் தலையிட்ட பிறகே, நிலைமை மோசமடைவதிலிருந்து தடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

நியாசின் இந்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எந்த வித ஆதாரமும் இன்றி நியாசி பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு புகார்களில் ராவல் பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *