செக் வந்த பிறகு புராசஸ் ஃபீஸ் கட்டுறேனு சொன்னேன். அதை ஏத்துக்கிடல. அப்பவே இது ஒரு ஃபேக்னு முடிவுக்கு வந்துட்டேன். கடைசியா பணத்தைக் கட்டுறீங்களா லோனை கேன்சல் செய்யட்டுமானு கேட்டாங்க. லோனைக் கேன்சல் செய்துக்கோங்கனு சொன்னேன்.
அத்தோட விட்டுடுவாங்கனு பார்த்தா, அதுக்குப் பிறகுதான் அவங்க வாய்ஸ் வேற மாதிரி இருந்திச்சு. கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுறாங்க. உங்க பான், ஆதார் உள்ளிட்ட டீடெய்ல் எங்ககிட்ட இருக்கு. உங்களை என்ன செய்யறோம் பாருங்கனு சொன்னாங்க.
நானும் பதிலுக்கு போலீஸ்ல புகார் தர்றேன்னு சொல்லிட்டு புகாரும் கொடுத்துட்டேன்.
போலீஸ் தரப்பிலோ அந்த டீடெய்லை வச்சுகிட்டு அவங்களால் வேற ஒண்ணும் பண்ண முடியாது. நீங்க இனிமே அந்த எண்ணில் இருந்து மெசேஜ், அழைப்பு வந்தா ரெஸ்பான்ஸ் செய்யாதீங்க’னு சொல்லியிருக்காங்க.
நாம எவ்வளவுதான் அலெர்ட்டா இருந்தாலும் ஒருகட்டத்துல ஏமாந்திடுறோம். அதனால இதே மாதிரி லோன் கால் வந்தா வேற யாராவது ஏமாந்துட வேண்டாம்கிறதுக்காகவே நானும் கூச்சப்படாம சொல்ல நினைச்சேன்’ என்றார் நவீந்தர்.