புதுச்சேரி : ஹோட்டல் அக்கார்டில் ( HOTEL ACCORD ) ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், Piaggio Vehicles Private Limited நிறுவனம் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது. நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி கலந்து கொண்டு வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பியாஜியோ நிறுவனத்தின் துணைத் தலைவர் மட்டியோ கொலனின்னோ, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் பட்ஜாத்யா, புதுச்சேரியில் பியாஜியோ மின்சார வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகமான Future Automobiles நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜத் மல்ஹான் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது நிகாஸ் ஜக்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கமான மின்சார வாகனங்களைப் போல பல மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி, இந்த வாகனத்தின் காலியான பேட்டரியை சில நிமிடங்களிலேயே அகற்றி, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பொருத்தி மீண்டும் பயணத்தைத் தொடர முடியும் என்பதே இதன் முக்கிய சிறப்பம்சம்.