சமீபகாலமான கேரளாவில் பள்ளி கல்லுாரி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வருகின்றது. அதனை தடுக்கும் விதமாக ‘ஆப்ரேஷன் டூஃபான்; தி நார்கோ ஹன்ட்’ என்ற நடவடிக்கையை,கேரளாவின் முதலமைச்சர் வி.டி.சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் தொடங்கியது. ‘டூஃபான்’ என்பதற்கு ஹிந்தியில் புயல் என்று பொருள். அதாவது போதை என்னும் புயலில் சிக்கியுள்ள இளைஞர்களை அதனியிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆப்ரேஷன் டூஃபான் நடவடிக்கை மூலம் கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றியுள்ளன என்றும் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிலதா தலைமையில் கேரளா, தமிழகம்,கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கேரளாவில் செயல்படுத்தப்படும் ஆப்ரேஷன் டூஃபான் திட்டத்தை, தென் மாநிலங்களுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக, ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி இடையே நிரந்தரமான ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சுங்கத் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய முகமைகளும், தங்கள் தரப்பில் இருந்து ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து, ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதியளித்துள்ளன. மேலும் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கடத்தல் கும்பல்களை களைந்தெறியவும், அவ்வப்போது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படும் முக்கிய வழித்தடங்களை தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளை, இந்த மாநிலங்களுக்கு இடையிலான அமைப்பு விரைவில் மேற்கொள்ளும். கடத்தல்காரர்கள் அதிகம் பயன்படுத்தும், ‘ஆன்லைன்’ தளங்கள், கூரியர் சேவைகள், ‘டிராப்’ டெலிவரி முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் போதைப் பொருள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாநில எல்லை மற்றும் சாலைகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, மாநில எல்லைகள், சாலைகள், பஸ்கள், ரயில்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நுழைவு புள்ளிகளையும் மூடுவதில் அடுத்த கட்ட கவனம் செலுத்தப்படும்.
மருந்து கடைகள் வாயிலாக பெறப்படும் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, சுகாதாரம் மற்றும் போலீசார் மாநிலம் முழுதும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது அதிகமான போதைப் பொருட்கள் பயன்பாடு சற்றே அதிகரித்துள்ளது. அதனைத் தடுக்கும் விதமாகவும் இந்த திட்டம் இருக்கும் என்றும் இதனை தமிழ்நாட்டிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமைச் செயலகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதலமைச்சர் விஜயை சந்தித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போதைப் பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சருக்கு சால்வை அணிவித்து அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்றார்.

