சேப்பாகத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சேப்பாக்கம் மைதானமே கூடுதல் உற்சாகமாக இருக்கப்போகிறது.
இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கிட்டதட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. குறிப்பாக, சென்னை சூப்பர்கிங்கஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில், மீதம் உள்ள இரண்டு போட்டிகளிவுலும் வெற்றி கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. சென்னை அணியில் முகமாக அறியப்படும் தோனி, இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடர் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இன்று நடைபெறும் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியுடனான போட்டியில் அவர் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. நடப்பு தொடரில் சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது

சேப்பாக்கத்தில் குவியும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு தோனியின் வருகை பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவர் பங்கேற்று விளையாடிய பிறகு, தனது ஓய்வு முடிவையும் அறிக்கப்பட உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டமே தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்கிற தகவல் முதல்வர் அலுவலகம் வரை எட்டியது. இதனால் இன்று நடைபெறும் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க முதல்வர் விஜய் விரும்பியிருக்கிறார். அவருடன் அவர் அமைச்சரவை சகாக்களும் இந்த போட்டியை காண விரும்புகிறார்கள்.
இதனால், வி.ஐ.பி கேலரியில் உள்ள மொத்த டிக்கெட்களையும் முதல்வர் அலுவலகம் தரப்பே வாங்கியுள்ளதாம். ஏற்கனவே மைதானத்தில் தோனி இறங்கினால், விண்ணை முட்டும் அளவுக்கு சத்தம் எழும். இப்போது முதல்வர் விஜய்யும் இந்த போட்டியை கண்டுகளிக்க வந்தால், சேப்பாக்கம் மைதானமே ஆரவாரத்தினால் அதிரும் என்கிறார்கள்.
முதல்வர் இந்த போட்டியை காணும் சூழ்நிலை இருப்பதால், பாதுகாப்பு வசதிகளையும் பலப்படுத்த சொல்லியுள்ளது காவல்துறை.