தவெக கட்சியின் எம்எல்ஏ என்.இளையராஜாவிடம், ஐபிடிஎஸ் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து எம்எல்ஏ இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, திருநாவுக்கரசு தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
அந்த வகையில் கையெழுத்திட்ட பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசு, “மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஜான் ஆரோக்கியசாமியிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன், விஜய்யிடம் எவ்வளவு முறை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறேன், ஆதவ் ஆர்ஜுனாவிடம் எவ்வளவு முறை தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வதற்கான காலம் இருக்கிறது.