2024-ம் ஆண்டு, தான் இறப்பதற்கு முன்பு வரை, டாடா அறக்கட்டளையில் தலைவராக இருந்தார் தொழிலதிபர் ரத்தன் டாடா. அவரது மறைவிற்குப் பிறகு, அந்தப் பதவி அவருடைய தம்பியான நோயல் டாடாவிற்கு சென்றது.
அப்போது, டாடா சன்ஸ் தலைவர் பதவியும் இவருக்கே கிடைக்குமா என்று பார்த்தால், அது முடியாது.
2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளின் படி, சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட் அல்லது சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றின் தலைவராக இருப்பவர், டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்க முடியாது.

அதனால், இந்த விதிமுறைப்படி நோயல் டாடாவிற்கு டாடா சன்ஸ் தலைவர் பதவி கிடைக்காது.
இப்போது யார் பெயர் அடிப்படுகிறது?
தேர்வுக்குழு, நோயல் டாடாவை எல்லாம் தாண்டி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்தத் தலைவர் இவர் தான் என்று ‘டி.வி.நரேந்திரன்’ பெயர் அடிப்படுகிறது.
இவர் தான் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. இவருக்கும், டாடா குழுமத்திற்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உறவு உள்ளது.