காங்கிரஸ் ஏற்கெனவே த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய த.வெ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துவிட்டது. திருமாவளவனின் விசிக கட்சியும் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதாவிடம் த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதில் அளித்த அவர், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் அதை தேமுதிக வரவேற்கும் என்றுதான் நான் சொல்லியிருந்தேன்.
அந்த வகையில் தமிழகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. ஆனால் அது ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும்.